நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இதுவரையில் 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு வெளியிடப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையால் இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 860 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுப்பெற்று வருவதால், எதிர்வரும் நாட்களில் தென்மேற்கு பிராந்தியங்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
