நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முட்டை கலந்த சோறு பொதியை உண்டதையடுத்து வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஆபத்தான நிலை இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நுவரெலியா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
