ஹம்பேகமுவவில், 14 வயதுச் சிறுமியொருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான்.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமியின் வீட்டிற்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சந்தேகநபரான இளைஞனும் அவனது குடும்ப உறவினர்களும் சென்றுள்ளனர். அநுராதபுரத்திலுள்ள சிறுமியின் வீட்டிலேயே வைத்து அந்த இளைஞன் 14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
