Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி  பங்கேற்றிருந்த நபர்களின் குறுக்கீடு காரணமாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் இடைநடுவில் வெளிநடப்பு செய்திருந்தனர்.

வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த மீனவர்களை காப்பாற்றுவதற்கு கடற்படை தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும்,  அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களை தேடும் நடவடிக்கையில் முன்னேற்ற நிலையினை எட்டியிருக்க முடியும் எனவும்  பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதே மேற்குறித்த குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங் கிணைப்பு குழுக்கூட்டம்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை பிற்பகல்  2.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.

இதன்போது பருத்தித்துறை நகர பிதா வின்சன்ட் டீ போல் .டக்ளஸ்போல், வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் நா.பத்மநாதன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உ.யுகதீஸ், உப தவிசாளர் சிறீகாந்தன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பருத்தித்துறை, வல் வெட்டித்துறை நகர சபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்ப வற்றின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள். திணைக்களங்களின் பிரதிநிதிகள்,  பொலிஸ்,

இராணுவ அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல ரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி கடலில் மீன்பிடி நடவடிக் கையின் போது காணாமல் போயிருந்த நான்கு மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினரது பங்குபற்றுதல் தொடர்பில் பருத்தித்துறை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி விளக்கமளித்திருந்தார். கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்பட்டமை தேடுதல் நடவடிக்கையின் போது சவாலாக இருந்தது என அவர் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கருத்தை மறுத்து பதிலளித்திருந்தார்.

“எமது மீனவர்கள் சாதாரண படகில் சென்று இந்த கடற்கொந்தளிப்புக்கு மத்தியில் தேடுதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் எமது மக்களுக்கு ஒரு நெருக்கடி வரும் போது கடற்படையால் உரிய முறையில் செயற்பட முடியாதென்றால் அவர்கள் எங்கள் மணிணில் இருப்பதில் அர்த்தமில்லை. ஏற்கனவே இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட காரணங்களினால் எங்கள் கடல் வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் சுடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடவில்லை. அவர்கள் தேடியதை  தாம் கண்ணால் காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட உள்ளுார் மீனவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர். ஆனால் கடற்படை தேடியது என இங்கு சொல்லப்படுவது. இந்த நிலை மிக வேதனையானது. உடனடியாக கடற்படை செயற்பட்டிருந்தால் அவர்களை கண்டுபிடித் திருக்கலாம். ” என அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு!

வைகாசி 15, 2026
இலங்கை

2026ல் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு;  பொலிஸ் எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube