Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சாரதி உரிமம் இன்றி பஸ்ஸை இயக்கிய சாரதி கைது!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸொன்றை இயக்கிய தற்காலிக சாரதி நேற்று (07) மாலை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் – திக் ஓயா சலங்கந்த பகுதியில் இருந்து தினசரி சேவையில் ஈடுபடும் குறித்த பஸ்ஸின் வழக்கமான சாரதி, பயணத்தின் இடைப்பட்ட பகுதியில் சாரதி உரிமம் இல்லாத நபரிடம் வாகனத்தை ஒப்படைப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர் பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாதை செங்குத்தான மலைச்சரிவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளைக் கொண்டதுடன், அடிக்கடி விபத்துகள் பதிவாகும் அபாயகரமான மார்க்கமாகவும் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராகவும், சாரதி உரிமம் இல்லாத ஒருவரிடம் பஸ்ஸை இயக்க அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராகவும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலையில் 330 மீ.மீக்கும் அதிக மழை வீழ்ச்சி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளவத்தை வாழ் சொந்தங்களுக்கு……..

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கையடக்க   தொலைபேசிக்காக 11 வயது சகோதரியை கொலை செய்து குளியலறை தண்ணீர் தொட்டியில் போட்ட 14 வயது சகாதரன் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு பெண்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் 3 வருடங்களின் பின்னர் கைது!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube