நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து அமைதி வழியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒற்றை மேற்கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று எட்டாம் திகதி காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்நோக்கி காணப்படுகிறது மாணவர்கள் விருப்பமுற்று ஊடக கற்றலுக்கு செல்ல மறுக்கிறார்கள் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பத்தை விளைவித்து வருவதாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் குறித்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்கள்
குறித்த ஆசிரியர் தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை அதனால் இந்த அமைதி வழியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கல்வி அதிகாரிக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பித்தக்கது
