மோசமான வானிலை காரணமாக செயலிழந்த படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று கடற்றொழிலாளர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடற்றொழில் படகு ஒன்று ஆபத்தான நிலையில் இருப்பதாக மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்தினால் கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அனலைத்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கடற்றொழில் படகும் அதில் பயணித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கண்டறியப்பட்டனர்.
மேலும், செயலிழந்திருந்த குறித்த படகை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்படையினர் இழுவைப் படகு உதவியையும் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
