எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் ஹரிணி அமரசூரிய, தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
பழைய தேர்தல் முறையோ அல்லது புதிய தேர்தல் முறையோ எதுவாக இருந்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடம் உள்ள நம்பிக்கையின் அளவை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
