Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

ஆனி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயல்பாட்டு காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடர்புடைய அரச அறிவித்தலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையில் 2010 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் சொத்துகளை தவறாக பயன்படுத்துதல் போன்ற விடயங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் இந்த ஆணைக்குழு செயல்பட ஆரம்பித்தது.

இக் குழுவின் ஆரம்ப கால அவகாசம் இன்று (29) நிறைவடைய இருந்த நிலையில், அதன் பணிகளை முழுமையாக நிறைவு செய்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நேரத்தை வழங்கும் வகையில் காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணி பியசேன ரணசிங்க அவர்கள் செயல்படுகின்றார்.

மேலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கணக்காய்வு சேவையின் (தரம் 1) ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவரைகலை மீட்பதில் சிரமம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பிலான ஆதாரத்தோடு மே 9 பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாவேன் – உதய கம்மன்பில!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

ஆனி 1, 2026
இலங்கை

ஹோகந்தரையில் 5 அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube