பொசன் பௌர்ணமி புனித தினத்தை முன்னிட்டு, பொரலஸ்கமுவ நகர சபை ஏற்பாடு செய்த “அனுபுதூ வந்தனா” பொசன் மண்டலம், பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ராஜமகா விகாரையில் நேற்று (29) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
பெல்லன்வில விகாரைக்கு வருகை தந்த பிரதமர், விகாராதிபதி அதிபூஜ்ய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரரை சந்தித்து சுமுக உரையாடலில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் போதி மண்டபத்துக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றார்.
பின்னர் “அனுபுதூ வந்தனா” பொசன் மண்டலம் மின்விளக்குகளால் ஒளிரச் செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தம்ம பாடசாலை மாணவர்களால் வழங்கப்பட்ட பக்தி கீத நிகழ்ச்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பொரலஸ்கமுவ நகர சபை தலைவர் நிஷாந்த வேதமுல்ல உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பிரதேச மக்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
