இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (02) அறிவித்துள்ளது.
இந்தத் தொடரானது 2025–2027 ஐசிசி (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
