தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் 2025 டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்த இரண்டு சிங்கக்குட்டிகளுக்கு இன்று (03) பெயர் சூட்டப்பட்டது.
கடந்த மாதம் ஜுன் 21 ஆம் திகதிவரை காலையில் குறித்த சிங்க குட்டிகள் துள்ளிக் குதித்து விளையாடுவதற்கு மிருககாட்சி சாலையில் உள்ள மைதானத்திற்கு அழைத்து வந்து காட்சிப்படுத்தப்பட்டதுடன் அங்கு பார்வையிடுவோர் பெயர்களை இடும் பெட்டியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தெஹிவளை மிருககாட்சிசாலையின் 90-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த பெயர்சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இரு பெயர்கள் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண் குட்டிக்கு #Cairo என்ற பெயரும் பெண் குட்டிக்கு #Zora என்ற பெயரும் தெரிவு செய்யப்பட்டது.
ஆண் குட்டிக்கு Cairo என்ற பெயரை தெஹிவளையை சேர்ந்த ஆன்டிரிஷா (anne trisha) வைத்த பெயர் தெரிவானதுடன் பெண் குட்டிக்கு Zora என்ற பெயரை மினுவாங்கொடவை சேர்ந்த ஜெரூஷா மனவாடுகே (Yerusha Manawaduge ) வைத்த பெயர் தெரிவானது.
தெரிவான பெயர்களை சூட்டிய இருவருக்கும் விருந்தினராக கலந்து கொண்டவரால் பரிசிலும் வழங்கப்பட்டது.
