இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் வெள்ளி திருடப்பட்டமை குறித்து நேற்று (04) காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
