தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் அமுல்படுத்துவதற்கான, வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியல், அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி சட்ட வரைவாளர் திணைக்களத்தின் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு, அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் அமுலுக்கு வரும் என்றும், சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் அதற்குப் பின்னர் 12 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
