நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் மோதலைத் தொடர்ந்து அங்கிருந்த சில கைதிகளை கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைக்குள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டும், வன்முறைகளைக் கட்டுப்படுத்தி கைதிகளைத் தனிமைப்படுத்தும் நோக்கிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
