கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் தாமதமடையக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
