இலங்கையின் சில பகுதிகளில் இன்று (08) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சிலாபம் முதல் காலி வரையிலான கடற்பரப்பில், கொழும்பு ஊடாக சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பகுதிகளில் தென்மேற்கு திசை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இந்த கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், நாட்டைச் சூழ்ந்த ஏனைய கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
