எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி இரண்டு கஜமுத்துக்களை (யானை முத்துக்கள்) விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘மெட்ரோ’ வீட்டுத்தொகுதிக்கு அருகில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தலவத்துகொட, மீதலாவ மற்றும் தொலஸ்பாகே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
