மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்திறந்து வைக்கப்பட உள்ளது.
இலங்கையில் சிறுநீரகக் கல் நோயால் பாதிப்புளன்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட சிறுநீரக அறுவைச் சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றன. எனினும், உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் நவீன எண்டோயுரோலொஜிகல் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, அறுவைச் சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதற்குத் தீர்வாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் ஆலோசனையின் பேரில், இலங்கை சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்த மத்திய சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தமது நோயாளர்களை இங்கு அழைத்து வந்து, நவீன வசதிகளுடன் திறம்பட அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
இதன் ஆரம்பத்திட்டத்தின் போது தொழிலதிபரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
