அநுராதபுர நகர மொகிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 08ஆம் திகதி புதன்கிழமை காலை 07.00மணிக்கும் 08.00மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் பள்ளிவாசலில் உள்ள சீ.சீ.டீவியிலும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக வேண்டி அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
