கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால்நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்படவுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் இந்தப் புனிதப் பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, காட்டுவழியாகப் பயணித்துக் கதிர்காமத்தை அடைவார்கள்.
இன்றுமுதல் பக்தர்கள் குறித்த காட்டுவழி பாதையினூடான பத்தி பயணத்தை தொடங்குவார்கள். மேலும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும் கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கோலாகமாக முன்னெடுக்கப்படவுள்ளமை சுட்டிக்க்காட்டத்தக்கது.
