அனுராதபுரம் சங்கிலி கனடரவ பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட புஞ்சாகே கலுமேனிகே, 114 வயதில் காலமானார்.
1912 ஜூலை 4 ஆம் திகதி பிறந்த அவர், அண்மையில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் உயிருடன் இருந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.
12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரப்பிள்ளைகளைக் கொண்ட பெரும் குடும்ப மரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
