தமிழ் திரையுலக பாடலாசிரியரும் எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று (13) நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரன்சிங் இந்த விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்த விருதைப்பெறும் 60 ஆவது இலக்கியவாதி வைரமுத்து ஆவார். தனது பிறந்த நாளன்று இந்த உயரிய தேசிய விருதை அவர் பெற்றுள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருதை பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். இதற்கு முன்னர் மறைந்த எழுத்தாளர்களான அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து ஏற்கனவே ஏழு முறை சிறந்த திரையிசை பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது, சாகித்திய அகடமி விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1964 முதல் வருடம் தோறும் இந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுடன் 11 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், சரஸ்வதியின் வெண்கல சிலை மற்றும் இந்திய குடியரசு தலைவர் வழங்கும் பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
