மோட்டார் சைக்கிள்களில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு கட்டாயமாக தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதனை நடைமுறைப்படுத்த பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, தலைக்கவசம் இன்றி மாணவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
