காலஞ்சென்ற கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி கட்டார் தலைநகர் தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்-தானியைச் சந்தித்த பிரதமர், காலஞ்சென்ற முன்னாள் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானியின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
