தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க கட்டுப்பாட்டு நிலையத்தில் 2 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணித்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் திஹகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28 மற்றும் 32 வயதுடைய இருவரும் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
