நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ நாளை (23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் அலுவலகப் பணிகள் வழக்கம்போல தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
