முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.
சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா (2 கோடி ரூபா) பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
