அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்ஹின்ன ஆகிய பகுதிகளில் 48 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (23) வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 8:30 மணி வரை இந்த நீர் வெட்டு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளநீர்வடிகாலமைப்பு சபை, நீர் விநியோகம் சீரமைக்கப்படும் வரை பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
