பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, இதுவரை முன்னடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (24.07.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ்ப் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அனைத்தையும் செவிமடுத்த ஜனாதிபதியிடமிருந்து பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
