இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றி வரும் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் நிறைவடைந்து பிரியாவிடை பெறும் முன்னர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இதன்போது, “சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு. எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது. இலங்கை மக்களின் அன்பை மறக்க முடியாது. இலங்கை எப்போதும் எனது இரண்டாவது தாய்நாடு” என தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சந்திப்பின்போது, இலங்கை–சீனா இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, போக்குவரத்துத் துறை மற்றும் மின்சார வாகனத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சீனத் தூதுவர் இலங்கையில் ஆற்றிய சேவையைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.
