பலாங்கொடை, ஊவா கொஸ்கம மற்றும் வெஹெரகொட உள்ளிட்ட 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம மக்கள் எதிர்கொண்டு வந்த வனயானை அச்சுறுத்தலுக்குத் தீர்வாகப் புதிதாக அமைக்கப்பட்ட யானை வேலி அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக யானைகளின் அச்சுறுத்தலால் பாதிப்புகளை எதிர்நோக்கி வந்த இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு கோடிற்று 9 இலட்சம் ரூபா (ரூ. 10.9 மில்லியன்) செலவில் இந்த யானை வேலி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண சபையின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த யானை வேலியின் மொத்த நீளம் 52 கிலோமீற்றர்களாகும். அதில் முதற்கட்டமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 7 கிலோமீற்றர் நீளமான யானை வேலியே பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்பகுமார அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
