ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், கிழக்கு சவுதியை செங்கடல் எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்புவுடன் இணைக்கும் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் போக்குவரத்து தளங்களை திங்கட்கிழமை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான Saudi Aramco இதுவரை இந்த தாக்குதல் குறித்து உடனடி கருத்து எதையும் வெளியிடவில்லை.
ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ கூறுகையில், ஏமன் வான்வெளியில் சவுதி ட்ரோன்கள் ஊடுருவியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கிய பின்னர், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீதான ஈரான் தாக்குதல்கள் அதிகரித்ததால், சவுதி தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கிழக்கு-மேற்கு குழாய் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றியிருந்தது.
கடந்த வாரம், ஈரானின் கூட்டாளிகளான ஹவுதிகள், செங்கடல் பகுதியில் சவுதியின் எண்ணெய் தொழில்துறைக்கு முற்றுகை விதிப்பதாக எச்சரித்தனர். இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோக பாதிப்பு குறித்த அச்சமும், எண்ணெய் விலையும் மேலும் அதிகரித்தது.
இதற்கு பதிலளித்த சவுதி, கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதாக கூறி, ஏமனின் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள ஹவுதி இராணுவ நிலைகள் எனக் கூறப்படும் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
