தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையின் (E06) முதலாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கஹதுடுவ முதல் இங்கிரிய வரையான பகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளுக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்த பின்னர், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
