வரலாற்றுச் சிறப்புமிக்க ஹப்புத்தளை முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (29) பெருந்திரளான பக்த அடியார்கள் புடைசூழ சிறப்பாக நிறைவுபெற்றது.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், “அரோகரா” முழக்கத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பக்தர்களின் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற தேர்த் திருவிழா, அப்பகுதியில் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நிறைவடைந்தது.

