மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். கடல் அலைகள் 2.5 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்களும் கடற்பயணிகளும் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
