வடகிழக்கில் தொல்லியல் நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்டு கையகப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர், தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், மாகாண சபைகள், மேய்ச்சல் நிலங்கள், விவசாயம், மீன்பிடித் துறை மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அரசின் செயற்பாடுகள் குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார்.
செம்மணி மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
