வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த ஜூலை 31 ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொடவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்ததும் தெரியவந்தது.
காலாவதியான அனுமதிப்பத்திரம் கொண்ட நபருக்கு பேருந்தை இயக்க அனுமதித்த குற்றச்சாட்டில், அந்தப் பிரபல தனியார் பேருந்து சேவையின் உரிமையாளர் இன்று புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
