பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையான (NEVIDA) தொடர்ச்சியான அபிவிருத்தி, அதன் செயற்பாடுகளை வலுப்படுத்தல் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், NEVIDA தலைவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தித் தேவைகளை கருத்தில் கொண்டு NEVIDA நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவது, அதன் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
