பொலிஸ் மா அதிபர் தொடர்பாக வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு முன்னிலையான வேளை கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
