கொஸ்வத்தை பகுதியில் பயிர் நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்வத்தை லுனுவில பகுதியில் நேற்று (10) சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
தென்னந்தோப்பு ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதியாக வெள்ளை நிறக் கால்சட்டையும், கருப்பு நிற மேற்சட்டையினையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவ்விடயம் தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
