குருணாகல் – அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவராவார். தனது விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தபோதே அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
