இலங்கை காவல்துறைக்கு 2027 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் புதிய சீருடையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரின் சீருடையை மாற்றுவதோடு மாத்திரம் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடாது எனவும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும், அதனைப் பொதுமக்களுக்கு மேலும் உகந்ததாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
