இலங்கையில் பதிவாகும் மொத்த குற்றச் சம்பவங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை மேல் மாகாணத்திலேயே இடம்பெறுவதாக, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாணத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
