பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (23) கடமையில் இருந்த குறித்த வைத்தியர், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன வைத்தியரின் கார் மீகஹகியுல பகுதியில் மஹியங்கனை நோக்கிச் செல்வது, குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியின் 17 ஆம் மைல் கல்லுக்கு அருகில் உள்ள மாபாக்கடவெவ பகுதியில் வைத்தியரின் கார் நேற்றிரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
