பொகவந்தலாவை எல்பட மேல்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அந்நபர் உயிரிழந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து மரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது.
இதனால் காயங்களுக்கு உள்ளான நபர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த நபர் 52 வயதுடைய, கண்டி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
