யாழ்ப்பாணத்தில் இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி தவறவிட்ட ரூ.10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும், அதனை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பருத்தித்துறை–வட்டுக்கோட்டை 767 வழித்தட பஸ்ஸில் கடந்த 23ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் செயற்பாட்டை பயணிகளும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.
