ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஐஸ்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றுவருவதாக சர்வதேச ஊடங்கங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
13 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக ஐஸ்லாந்தில் பாதுகாப்பு தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்துள்ளதும், உள்ளூர் நாணயமான ‘குரோனா’ (Krona) மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளும் இந்த வாக்கெடுப்புக்கு முக்கியக் காரணங்களாகும்.
இந்த வாக்களிப்பில், மக்கள் “ஆம்” என்று வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன், பல ஆண்டுகளின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது.
அதன்பிறகு, இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த வாக்கெடுப்பில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகள் மிக நெருக்கமாக (Neck-and-Neck) உள்ளன.
இந்தநிலையில், இந்தத் தேர்தல் முடிவு ஐஸ்லாந்தின் பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு உளடக செய்திகள் தெரிவிக்கின்றன.
