இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பணிப்புரை விடுத்த நிலையில் இன்றைய தினம் (01) அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
