இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் பரவி வரும் காட்டுத்தீயால் ஒராங்குட்டான்கள் உள்ளிட்ட அபூர்வ உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிந்து, அவற்றின் உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கு கலிமந்தானின் கேதாபாங் பகுதியில் உணவு, நீரின்றி பலவீனமான நிலையில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான் ஒன்று மீட்கப்பட்டு, YIARI வனவிலங்கு அமைப்பின் மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் ஒராங்குட்டான்களுக்கு உணவும் நீரும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகவும் விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் பணிப்பாளர் சி.இ.ஓ கர்மேலே லானோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புகையைக் கட்டுப்படுத்தவும், காட்டுத்தீயை அணைக்கவும் ஆறு மாகாணங்களில் இந்தோனேசிய அரசு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
